அண்ணாநகர்: திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (27). ஐடி கம்பெனி ஊழியர். நேற்று காலை இவர் கோயம்பேட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாவட்டம் செல்லும் ஆம்னி பேருந்து, பைக் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கலையரசனின் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இதை பார்த்த ஆம்னி பேருந்து டிரைவர் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர், சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (38) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.