டெல்லி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி, ரயில்வே நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை. ரயில் பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் உரிய ஆலோசனை வழங்கும் வகையில் ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.