சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2வது நிலையின் 2வது அலகில் நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.