Friday, May 17, 2024
Home » 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் விமான நிலைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் விமான நிலைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

by Ranjith

 

சிவகங்கை, ஜன. 20: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: இந்திய விமான ஆணையம் ஜுனியர் அசிஸ்டண்ட், சீனியர் அசிஸ்டண்ட் ஆகிய குரூப் ‘சி’ பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜுனியர் அசிஸ்டண்ட்(தீயணைப்பு பிரிவு) காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 3வருட டிப்ளமோ (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல்) மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது 12ம் வகுப்பு மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் முன்னாள் படைவீரர் விண்ணப்பிக்கலாம்.

ஜுனியர் அசிஸ்டண்ட்(அலுவலக பிரிவு) பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். சீனியர் அசிஸ்டண்ட்(எலெக்ட்ரானிக்ஸ்) பணிக்கு டிப்ளமோ(எலக்ட்ரானிக்ஸ் அல்லது இதர பிரிவுகள்) முடித்திருத்தல் வேண்டும். சீனியர் அசிஸ்டண்ட்(அக்கவுண்ட்ஸ்) பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும். இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 33, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35ஆகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 26.01.2024 கடைசி நாளாகும். www.aai.aero என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

fourteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi