♦12 அவரை இலைகளை எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் 2 தேக்கரண்டி அளவு அன்னாசிப் பழச்சாறு சேர்த்து நன்றாக அரைத்து, அதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் முகம் பளிச்சென்று அழகாக இருக்கும். இதை வாரம் இரண்டு முறை செய்தால் போதும்.
♦½ தேக்கரண்டி கோதுமை மாவுடன் பாலாடை ½ தேக் கரண்டி பாதாம் பருப்பு 5 இவற்றை நன்றாக நீர் விட்டு அரைத்து அதனுடன் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து இதை முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு செய்தால் முகம் பளபளப்பாக, பளிங்குபோல் இருக்கும்.
♦அதிமதுர சக்கை யுடன் சிறிதளவு குங்குமப்பூ சிறிதளவு பால் விட்டு நன்றாக அரைத்து, இந்தக் கலவையை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவி வந்தால், முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி சிவப்பாகவும், அழகாகவும் மாறும்.
♦ நாட்டுக் கற்றாழையை எடுத்து, அதன் ஜெல்லி பகுதியுடன் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்துக் குழைத்து, அதை முகம், கழுத்துப் பகுதி களில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் இளமையாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும்.
♦ உருளைக்கிழங்கு சாற்றுடன் சமஅளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவ முகம் அழகாக மாறும்.
– இந்திராணி தங்கவேல்
இயற்கை அழகு!
previous post