சென்னை: நாமக்கல் வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் யசோதாவை பணியிடை நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து தாக்கல் செய்த யசோதா உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த மனு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. ரூ.25,000 அபராதத் தொகையை 11 தூய்மைப்பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.