Sunday, May 19, 2024
Home » இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களது டிக்கெட்களின் நகலை பகிர ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்..!!

இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களது டிக்கெட்களின் நகலை பகிர ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்..!!

by Nithya

சென்னை: இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களது டிக்கெட்களின் நகலை பகிர ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் ஆதங்கம் தெரிவித்த நிலையில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களது டிக்கெட்களின் நகலை பகிர ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்களது குறைகளை எங்களது குழு நிவர்த்தி செய்யும் என்று உறுதி தெரிவித்துள்ளார். arr4chennai@btos.in என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

3 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi