மணிப்பூர்: மோரே பகுதியில் நடத்தப்பட்ட தீவைப்பு சம்பவத்தில் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என மணிப்பூர் தமிழ்ச்சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மோரே பகுதிகளில் வீடுகளுக்கு மர்மகும்பல் தீ வைத்தனர். 16 வீடுகளுக்கு தீவைக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் தாக்கப்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளது.