ஜெய்ப்பூர்: மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் பேசிய அவர், பல ஆண்டுகளாக செய்யப்படாத பணிகளை கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என பல கனவுகள் எனக்கு உள்ளன. கடந்த தேர்தலின்போது பாஜக அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராணுவத்தை அவமதிப்பது, நாட்டை பிளவுபடுத்துவதே காங்கிரஸின் அடையாளம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.