சென்னை: ஏழைகளை வஞ்சித்து, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் சாதி பற்றி குறிப்பிடுவது பாஜகவின் வருணாசிரம கொள்கையை பிரதிபலிக்கிறது. மக்களிடையே மாற்றம் ஏற்படுவதற்கு பதிலாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் தருவதாக பட்ஜெட் அமைவதே, மக்கள் நல ஆட்சிக்கான சான்றாகும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.