சென்னை : ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆகியோர் குழுவில் உள்ளனர்.