சென்னை : மக்களவைத் தேர்தலில் மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. முன்னதாக தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட அனுமதி கோரி விண்ணப்பம் செய்து இருந்தது. சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் 2 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் மார்ச் 7ல் உத்தரவிட்டிருந்தது.