சென்னை: மநீம ெபாதுச்செயலாளர் அருணாசலம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஓடிப்போய் பதுங்கிக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் கமல்ஹாசனை பச்சோந்தி என்று விமர்சித்து இருப்பது கேலிக்கூத்து. மக்கள் நீதி மய்யமும், அதன் தொண்டர்களும் கமல்ஹாசன் மேற்பார்வையில் மக்களை சந்தித்து, நிவாரண பொருட்களையும், தேவைப்படும் உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், மழை தொடங்குவதற்கு முன்பே தலைமறைவான எடப்பாடி, பதுங்கு குழியிலிருந்து இப்போதுதான் வெளியே வந்து, மக்கள் தொண்டு புரிபவரை விமர்சிக்கிறார்.
இனியும் மநீம தலைவரை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.