சேலம்: முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு பஞ்சப்படியுடன் ஓய்வூதியம் வழங்க பெரியார் பல்கலை. துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் சேர்ந்து ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தரின் நடவடிக்கையை கண்டித்து வேலைநிறுத்தம் செய்ய பேராசிரியர்கள் தொழிலாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தங்கவேலு மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அனைத்து ஓய்வூதிய பலன்களும் வழங்க ஆணையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்ய பேராசிரியர்கள் தொழிலாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.