ஜபல்பூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி அறிவித்த தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளம் மீது தடை விதிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மபி மாநிலம் ஜபல்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பஜ்ரங் தள தொண்டர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இது சம்மந்தமாக போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் பஜ்ரங் தள அமைப்பின் மண்டல நிர்வாகியான சுமித் சிங் தாக்குர் உட்பட 10 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.