ஷம்ஷெர்கஞ்ச்: அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் பாஜவுக்கு வாக்குகள் கிடைக்க உதவாது என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கம், ஷம்ஷெர்கஞ்ச் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘ வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்கும் விதமாக ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். அமலாக்கத்துறை, சிபிஐயை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை பாஜ தொந்தரவு செய்கிறது. இந்த அமைப்புகளால் கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது’’ என்றார்.