திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர் குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, திருவொற்றியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை, அப்பகுதிக்குச் சென்ற போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது திருவொற்றியூர், துலுக்காணத்தம் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரவள்ளி (70), சுகுணா (58), ரமணி (46) ஆகிய 3 பெண்கள் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பது செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பெண்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.