சென்னை: நிலஅபகரிப்பு வழக்கில் புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி சிறப்பு அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டார். மாவட்ட பத்திர பதிவாளராக இருந்தபோது நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த புகாரில் புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிலஅபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள புதுச்சேரி பத்திரப்பதிவு இயக்குனர் ரமேஷை போலீஸ் தேடி வருகின்றனர்.