திருவனந்தபுரம்: கொல்லம் நிலமேல் பகுதியில் கேரள ஆளுநரின் தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். திடீரென காரில் இருந்து இறங்கிய ஆளுநர், போராட்டக்காரர்களை நோக்கிச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேநீர் கடைக்கு சென்று அமர்ந்த ஆளுநர் ஆரிப் கான், போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என தர்ணாவில் ஈடுபட்டார்.