புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் நேறறு கூறியதாவது: இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியதன் மூலம் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சரியானதைச் செய்யவில்லை. அவரது நடத்தை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இது தவறு என்று நான் உணர்கிறேன், அவர் வெளியேறியிருக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.