Saturday, May 11, 2024
Home » காரைக்குடி வாலிபர் கொலை வழக்கில் டிடிவி.தினகரன் ஆதரவு அமைப்பின் தலைவர் கைது: நீண்ட நாள் திட்டமிட்டு தீர்த்தது அம்பலம்

காரைக்குடி வாலிபர் கொலை வழக்கில் டிடிவி.தினகரன் ஆதரவு அமைப்பின் தலைவர் கைது: நீண்ட நாள் திட்டமிட்டு தீர்த்தது அம்பலம்

by Neethimaan

காரைக்குடி : காரைக்குடியில் வாலிபர் கொலையில் முக்கிய குற்றவாளியான ஆதிநாராயணனை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் வினித் என்ற அறிவழகன் (27). இவர் காரைக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். கடந்த 18ம் தேதி காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள லாட்ஜில் இருந்து கையெழுத்து போட வெளியே வந்தபோது வினித்தை மர்ம கும்பல் அரிவாள் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் ஓட ஓட வெட்டி கொலை செய்தது.

தனிப்படையினர் 48 மணி நேரத்தில் கொலையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்து கார் வாள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். கும்பலிடம் விசாரணை செய்ததில் மையிட்டான்பட்டி துணைத்தலைவர் தேர்தல் மற்றும் விருதுநகர் சந்தை ஏலம் தொடர்பாக ஞானசேகரனுக்கும் மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனுக்கும்(53) முன்பகை இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அறிவழகனை கொலை செய்துவிட்டு ஓடிய அந்த கும்பல் ஆதிநாராயணனின் உதவியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தவிர கொலையாளிகளுக்கு பணம் வழங்கியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருந்த ஆதிநாராயணனை.

நேற்று அதிகாலை திருப்பத்தூர் பைபாஸ் சாலையில் தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் ‘‘மையிட்டான்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் பதவியை விட்டு தரக்கோரி ஆதிநாராயணன் தரப்பு கேட்டுள்ளனர். ஆனால் ஞானசேகரன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் முன்பகை இருந்துள்ளது. விருதுநகர் சந்தையை ஏலத்தில் எடுக்க வினித் திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த ஆதிநாராயணன் வினித் தரப்பை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே சிறையில் இருந்த வினித் ஆதிநாராயணனை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டதும் தெரியவந்துள்ளது. இதனையறிந்த ஆதிநாராயணன் தரப்பினர் வினித்தை கொலை செய்தாக ஆதிநாராயணன் தெரிவித்தார்’’ என்றனர். கைதான ஆதிநாராயணன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

twelve − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi