சென்னை: கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். மருத்துவ மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பாகும். பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்களுக்கு தேவையான உயிர்காப்பு சிகிச்சைகளும் தரப்படுவதை உறுதி செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.