சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பில் வசிப்பவர் ரியா (19). மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த, ரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே ரியாவை மீட்டு எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் ரியா உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரியா தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.