டோக்கியோ: ஜப்பானில் நாகோ நகரில் உள்ள பீர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால், உணவிற்கு பயன்படுத்தபடும் சிவப்பு நிறமி ஆற்றில் கலந்துள்ளது. இதன் காரணமாக தண்ணீர் முழுவதுமே இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிறமியால் மக்களுக்கு உடலளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தொழிற்சாலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.