நகர்: ஜம்மு காஷ்மீருின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதி ஒருவன் ஊடுருவ முயன்றான். அவனை வீரர்கள் பல முறை எச்சரித்தனர். ஆனால் வீரர்கள் எச்சரிக்கையை மீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயன்ற தீவிரவாதி மீது வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து தீவிரவாதியின் சடலத்தை வீரர்கள் நேற்று காலை மீட்டனர். அந்த பகுதியில் வேறு யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என்று தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.