தருமபுரி: இந்தியா என்ற அழகிய நாட்டை பாசிச மதவெறி கொண்ட பாஜக அழிப்பதை தடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டுள்ளன என தருமபுரி பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் “சமத்துவத்தை கிலோ என்னவென்று கேட்கும் கட்சிதான் பாஜக. சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை, மக்களுக்கும் பாமகவினருக்கும் காரணம் நன்றாக தெரியும்” எனவும் தருமபுரி பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசினார்.
மேலும் முதல்வர் பேசியதாவது; “பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்து விடாமல் தடுக்க ஜனநாயக சத்திகளும் நாட்டு மக்களும் களம் கண்டுள்ள போர் இது. பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழிப்பதை தடுக்க தான் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள்ளன.
ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது நடக்க இருப்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஆகும். சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.. சமூக நீதி, சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. சிலிண்டர் விலையை குறைத்ததிலேயே பிரதமர் மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தில் உள்ளார் என தெரிந்துவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி உங்களுக்கு கியாரண்டி கொடுத்தாரா?
சமூக நீதியை பாதுகாக்க வேண்டும், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாக செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சமூக நீதி பேசும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை.
மக்களுக்கும் பா.ம.க.வினருக்கும் அதற்கான காரணம் நன்றாகவே தெரியும். பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்ததை அக்கட்சியினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு” என தருமபுரி பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஷைனார்.