கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் வாகன விற்பனை நிலவரங்கள் குறித்து மொத்த விற்பனை அடிப்படையில் வாகன நிறுவனங்கள் தனித்தனியாக விவரங்களை வெளியிட்டிருந்தன. இந்நிலையில், ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு ஏப்ரல் மாத வாகன சில்லறை விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:கடந்த ஏப்ரல் மாதத்தில் முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், டூவீலர்கள் விற்பனை 33 சதவீதம், ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 9 சதவீதம், பயணிகள் வாகனங்கள் விற்பனை 16 சதவீதம், டிராக்டர் விற்பனை 1 சதவீதம், வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 2% அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த மாதத்தில் 335,123 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரட்டை இலக்க உயர்வுடன், இது ஒரு சாதனை அளவாகும். நிறுவனத்தின் புதிய மாடல்கள் அறிமுகமும் இதற்கு ஒரு காரணமாகும். முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 289,056 வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சில வாகன நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்யாததால், அந்த நிறுவன தயாரிப்புகளின் விற்பனை மந்தநிலையில் காணப்பட்டது என்றே கூறலாம். இதுபோல் டூ வீலர் விற்பனையை பொறுத்தவரை 125சிசி இன்ஜின் திறன் கொண்டவற்றுக்கு வரவேற்பு காணப்பட்டது. கடந்த மாதத்தில் 16.4 லட்சம் டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதே மாதத்தில் இன்றைய எண்ணிக்கை 12.3 லட்சமாக இருந்தது. இதுபோல் கடந்த மாதத்தில் 90,707 வணிக பயன்பாட்டு வாகனங்கள். விற்பனை செய்யப்பட்டுள்ளன.
முந்தைய மாதத்தை விட இது 0.6% குறைவாகும். 56,625 டிராக்டர்கள் விற்பனையாகி உள்ளன. இவ்வாறு ஆட்டோமொபைல் டீலர்கள் தெரிவித்துள்ளனர்.ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க தலைவர் மணிஷ் ராஜ் சிங்கானியா கூறுகையில், வடமாநிலங்களில் குடி பட்வா மற்றும் நவராத்திரி பண்டிகைகள் போன்றவை வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்க காரணமாக இருந்துள்ளன. அதே நேரத்தில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்கள் முடிவை ஒத்தி வைத்திருக்கின்றனர். குறிப்பாக, சில நிறுவனங்கள் மொத்தமாக வாகனங்கள் முடிவை ஒத்தி வைத்து விட்டன என்றே கூறலாம். சில பள்ளிகள் பஸ், வேன் ஆகியவற்றை மொத்தமாக முன்பதிவு செய்தன. இருப்பினும், கடன் வாய்ப்புகள் குறைவு மற்றும் சில மாநிலங்களில் வறட்சி ஆகியவை வாகன விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தின. வாகன உற்பத்தி நிறுவனங்களில் இருந்து அதிகமாக வாகனங்கள் சப்ளை, தள்ளுபடிகள் போன்றவை டீலர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விற்பனையை கூட்டி இருந்தாலும், இதே நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பது சவாலாகவே இருக்கும் எனலாம்.