சென்னை: இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 3 ஆண்டாக சி.ஏ.ஏ. சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி தேர்தல் நேரத்தில் பிளவை ஏற்படுத்தி ஆதாயம் பெற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து மார்ச் 15-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வி.சி.க. போராட்டம் நடத்தும்.
தேர்தலுக்காக ஒரே மாநிலத்துக்கு திரும்ப திரும்ப வருகிறார் பிரதமர் மோடி. மக்கள் நலனை விட அரசியல் ஆதாயம் முக்கியம் என்று கருதுகிறார் பிரதமர். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம் எனவும் கூறினார்.