திருவனந்தபுரம்: கேரளாவில் மொத்தம் உள்ள 20 எம்பி தொகுதிகளில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 5 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜ உள்ளது. திருச்சூர் தொகுதியில் முன்னாள் ராஜ்யசபா எம்பி சுரேஷ் கோபி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பிரபல நடிகை ஷோபனாவை போட்டியிட வைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி திருச்சூரில் நடைபெற்ற பாஜ மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் நடிகை ஷோபனாவும் கலந்து கொண்டார். அப்போதே அவர் பாஜவில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. ஷோபனா தவிர சினிமா தயாரிப்பாளரும், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார், ஒன்றிய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், வி. முரளீதரன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.