Sunday, May 12, 2024
Home » ஓசூரில் பியூட்டி பார்லர் ஸ்பா சென்டரில் விபசாரம்: 3 பேர் கைது

ஓசூரில் பியூட்டி பார்லர் ஸ்பா சென்டரில் விபசாரம்: 3 பேர் கைது

by Suresh

ஓசூர்: ஓசூரில் பியூட்டி பார்லர், ஸ்பா சென்டரில் விபசாரம் நடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்ற பெயரில் அழகு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வந்தது தெரியவந்தது. அங்கிருந்த வேலூர் மாவட்டம் விருஞ்சிபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த சுமதி (32), ஷர்மிளா (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான பிரித்தி என்பவரை தேடி வருகின்றனர்.

இதேபோல், ஓசூர் அட்கோ போலீசார், பாகலூர் சாலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் சோதனை செய்தனர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ராம்சாத் (22) என்பவரை கைது செய்தனர். உரிமையாளர் ராஜ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூரில் பல இடங்களில் மசாஜ், ஸ்பா சென்டர்கள் அனுமதியின்றி இயங்குகின்றன. இங்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்களை அழைத்து வந்து விபசார தொழில் நடக்கிறது. இந்த ஸ்பா சென்டர்களில் போலீசார் சோதனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

thirteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi