திருப்பூர், மே 12: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் கிருஷ்ணர் சன்னதி கும்பாபிஷேக விழா நடந்தது. கேரளாவில் வடிவமைக்கப்பட்ட இந்த கற்சிலையானது சுமார் 1.75 அடி உயரம் கொண்டது. வலது கையில் வெண்ணெய் உருண்டையும் இடது கையில் புல்லாங்குழலும் வைத்தபடி நின்ற கோலத்தில் குழந்தை வடிவில் கிருஷ்ணர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைகள் நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதனை செல்வராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.