சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் நடந்த திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது. மாநாட்டு மேடை இதுவரை நடந்த மாநாடுகளில் இல்லாத வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல், வரவேற்பு முகப்புகள், உணவு உபசரிப்பு, விஐபிகள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவருக்கும், ஒரே சீரான வகையில் ஏற்பாடுகள் என்று அனைத்தும் பாராட்டு பெற்றது. இந்த மாநாட்டை உலக சாதனை மாநாடாக அங்கீகரித்து, யுனிக் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கியது. இந்த சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து, இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். அப்போது கைத்தட்டலால் மாநாட்டு அரங்கமே அதிர்ந்தது.
கின்னஸ் சாதனை மாநாடு
previous post