ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 25ல் நடைபெற உள்ளது. பாஜ வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் மாஜி முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர் இடம் பெறவில்லை. இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வசுந்தரா ராஜே உதய்பூர் வந்துள்ள அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார். சுமார் 40 நிமிடங்கள் இருவரும் பேசினர். இருவரும் மேவார் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ராஜஸ்தான் அரசியலில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி குலாப் சந்த் கூறுகையில், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இது வழக்கமான சந்திப்புதான் என்றார்.