கும்பகோணம்: கும்பகோணம் மாவட்டம் திருபுவனம் கும்பகேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு ஆளுநர் ரவி வருகையால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஆளுநர் வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் தரிசனத்திற்கு தாமதமாவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஆளுநர் ரவி வருகையால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பல மணி நேரமாக காத்திருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.