சென்னை: ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் தமிழ்நாடு அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜாதிவாரி கண்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரம் உண்டு என பீகார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகம், பீகார், ஒடிசா, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.