சென்னை : நிபந்தனை ஜாமின் ரத்து செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 8 பேர் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். 2022 செப்டம்பரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஒன்றிய அரசு தடை விதித்தது.பிஎஃப்ஐ இயக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.