ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை பா.ஜ.க. வேட்பாளர் மிரட்டியதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபி அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது திருப்பூரில் இருந்து வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். காரை ஓரமாக நிறுத்தாமல் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதோடு சோதனைக்கு ஒத்துழைக்க பா.ஜ.க. வேட்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு மிரட்டியுள்ளார். மேலும், வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவோன் என எச்சரிக்கை விடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.