திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி ஒன்றியம், கீழ்மணம்மேடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் சத்யபிரியா முரளிகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் நிறைமதி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ச.ஜானகி அமுதா வரவேற்று பேசினார்.
பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து, கீழ்மணம்பேடு பள்ளியில் 154 மாணவிகளுக்கும் பூந்தமல்லி, சரோஜினி வரதப்பன் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மேலும் 354 மாணவிகளுக்கும் என மொத்தம் 508 மாணவிகளுக்கு விலையில்லாத மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.சி.சி.கருணாநிதி, ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, சி.அண்ணாகுமார், ஜி.சுகுமார், பா.கந்தன், கட்டதொட்டி எம்.குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார், இ.பிரதீப், ஜி.பி.பரணி தரன், பிரவின் குமார், உதயகுமார், மு.தே.ராஜேஷ், சீதாபதி மற்றும் ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.