புதுச்சேரி: சிறுமி கொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் “இந்தியா” கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து “இந்தியா” கூட்டணி சார்பில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. பேரணியில் புதுவை காங். தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுள்ளனர். அமைதி ஊர்வலத்தில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றிருக்கின்றனர்.