டெல்லி: மராட்டிய மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக மீது அதன் கூட்டணிக் கட்சிகளான ஷிண்டே மற்றும் அஜித் பவார் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அமித்ஷா மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோதும் கூட்டணியில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.