சென்னை: தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் “மிக்ஜாம் புயல், வெள்ளப் பாதிப்பு நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ.37,907 கோடி கோரியது. மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை ரூ.2,477 கோடி செலவு செய்துள்ளது. ஆனால், பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் ரூ.276 கோடி. இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது” முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.