நீலகிரி: நீலகிரி மக்களவைத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி கேமராக்களின் காட்சித் திரைகளில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கட்சி முகவர்கள் அமரும் அறையில் உள்ள, காட்சித் திரையில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது. பின் சரி செய்யபட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.