காரைக்கால்: புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவை தனிப்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக கடந்த இரு மாதங்களுக்கு முன் அமைச்சரவையில் இருந்து முதல்வர் ரங்கசாமி நீக்கினார். கருத்துவேறுபாடு காரணமாக கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வரும் சந்திரபிரியங்கா காரைக்கால் குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில், குடிகாரன், பெண் வெறியன், ஆண் பேரினவாதி மற்றும் என்னைப்பற்றி கிசுகிசுக்களை பரப்பி வரும் ஒரு கணவருடன் வாழ விருப்பம் இல்லாமல் விவாகரத்து பெறுவதாக சந்திரபிரியங்கா குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனு தாக்கல் செய்த சந்திர பிரியங்காவை அடுத்த வாரம் (13ம்தேதி) நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.