சென்னை : சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ள சேதங்களுக்கு எவ்வளவு செலவு ஆனது என அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்திற்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கவேண்டும் என்று தெரிவித்த பழனிசாமி, குறுவை சாகுபடி செய்த விவசாயிகளை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரத்திற்கும் குறைவில்லாமல் வழங்க வேண்டும் என்றும் பழனிசாமி தெரிவித்தார்.