டெல்லி : மத்திய அரசுடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேச்சு நடத்தத் தயார் என விவசாய சங்கமான சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேச்சு வார்த்தையை போராட்ட இடத்திலோ அல்லது சண்டிகரில் நடந்த வேண்டுமென விவசாயிகள் நிபந்தனை விதித்துள்ளனர். அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம் என்றும் பேச்சு தொடர்பாக பிற விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் தலேவால் தெரிவித்துள்ளார்.