Saturday, May 18, 2024
Home » பைக் சாவி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் தந்தை, சித்தியை சரமாரியாக வெட்டிய வாலிபர்: கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்

பைக் சாவி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் தந்தை, சித்தியை சரமாரியாக வெட்டிய வாலிபர்: கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்

by Ranjith

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பைக் சாவி கொடுக்க மறுத்ததால் தந்தை, சித்தியை சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்மதன்(47). இவரது முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவதாக வனிதா(38) என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இதில் முதல் மனைவிக்கு விக்னேஷ்(22) என்ற மகன் உள்ளார். இவர் வேலைக்குச் செல்லாமல் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த விக்னேஷ், வெளியே செல்வதற்காக தனது தந்தையிடம் பைக் சாவியை கேட்டுள்ளார்.

குடிபோதையில் இருப்பதால் வெளியே செல்ல வேண்டாம் என விக்னேஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், தந்தை மன்மதனின் முகத்தில் அரிவாளால் வெட்டினார். அப்போது தடுக்க முயன்ற சித்தி வனிதாவையும் அவர் பின்னந் தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விக்னேைஷ தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

twenty + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi