Monday, May 13, 2024
Home » தந்தையுடன் விஷம் குடித்ததில் பிழைத்த வாலிபர் தற்கொலை

தந்தையுடன் விஷம் குடித்ததில் பிழைத்த வாலிபர் தற்கொலை

by MuthuKumar

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மகன் லோகேஸ்வரன் (25). டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 2.7.22 அன்று, குடும்ப பிரச்னையில் கண்ணதாசன், மகன் லோகேஸ்வரன் ஆகிய இருவரும் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கண்ணதாசன் உயிரிழந்தார். லோகேஸ்வரன் உயிர் பிழைத்தார்.

தந்தை இறந்தது முதலே லோகேஸ்வரன் சரிவர வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று லோகேஸ்வரன் தந்தையின் சமாதி அருகே இருந்த பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் லோகேஸ்வரனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

20 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi