சென்னை: தோல்வி பயத்தால் நிதானமிழந்து ஆத்திரம் பொங்க கடும் வார்த்தைகளால் பிரதமர் மோடி பரப்புரை செய்கிறார் என்று தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசி வந்த மோடி, பின்பு காங். தேர்தல் அறிக்கை பற்றி அவதூறு பரப்பினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்று அபாண்டமாக மோடி பேசுகிறார். அபாண்டமாக பேசும் ஒருவர் 10 ஆண்டு கால பிரதமராக பதவி வகித்தது இந்தியாவுக்கே அவமானமாகும். தனக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது மக்களின் விருப்பமாக அமைந்துவிட்டது என்று அவர் கூறினார்.