Saturday, May 18, 2024
Home » மோடி பொய் பேசுவதை எமன் பார்த்துக் கொண்டிருக்கிறார்: சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் சொல்கிறார்

மோடி பொய் பேசுவதை எமன் பார்த்துக் கொண்டிருக்கிறார்: சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் சொல்கிறார்

by Ranjith

சென்னை: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக மீஞ்சூரில் பிரசார தெருமுனை கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசியதாவது: வழக்கமாக ஆட்சி செய்பவர்கள் மோசடி செய்யும் நிலையில் தற்போது ஒரு மோசடியே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தற்போது வடமாநிலங்களிலேயே வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, 200 தொகுதிகள் கூட கிடைக்காது என்ற கருத்து கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் ஊழல் வெளிவந்ததால் தற்போது ஊழல் குறித்து பேசாமல் கச்சத்தீவு விவகாரத்தை மோடி பேசுகிறார். திமுக இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவேன் என மோடி பேசி வருவதற்கு, திமுக என்ன சரத்குமாரின் கட்சியா, நள்ளிரவில் இருட்டில் பயந்து உளறுபவனை போல மோடி தோல்வி பயத்தில் உளறி கொண்டிருக்கிறார். மோடி பொய் பேசும்போது எமன் பார்த்துக் கொண்டிருக்கிறார். உண்மை கலப்பில்லாத பொய் பேசுவது என்பது பெரிய சாமர்த்தியம்.

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதாரண பிரச்னைகளுக்கு கூட உள்நாட்டு போர் நடத்திடும் சூழல் உருவாகும். பாஜ ஆட்சி, கொள்கை, தத்துவங்களை சவப்பெட்டியில் போட்டு 300 ஆணிகளை கொண்டு அடித்து புதைத்திட வேண்டும். திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கர்நாடகாவில் பாஜவிற்கு வாயில் மண்ணை போட்டு தவிடு உண்ண வைத்து தண்ணீர் குடிக்க வைத்தவர், அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

twenty + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi