இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இத்தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதா புகார் எழுந்தது. இந்நிலையில், ராவல்பிண்டி மாகாண கமிஷனர் லியாகத் அலி சாத்தா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்தது உண்மை. தலைமை தேர்தல் ஆணையர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் பங்குண்டு. தோற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.